தேங்காய் மலபார் கூட்டு தேவையானவை: தேங்காய் துருவல் - அரை கப், காய்கறிகலவை - 2 கப், தனியா - 2 டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பச்சைமிளகாய் - 3 (அ) 4, சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய், உப்பு - சிறிதளவு.
செய்முறை: கடாயில் காய்கறிகளை வேக வைக்கவும். மிக்ஸியில் தேங்காயைப் போட்டு, தனியா, இஞ்சி, சீரகம், பச்சைமிளகாயைப் போட்டு அரைக்கவும். வெந்த காய்கறிகளில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும்.
தேங்காய்-தக்காளி கூட்டு தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், மீடியமான தக்காளி - 4, பச்சைமிளகாய் - 4, வெங்காயம் - 1, சீரகம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தனியாத்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: தேங்காய் துருவல், வெங்காயம், காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் தக்காளி, பச்சைமிளகாய் துண்டுகளைப் போட்டு, 2 கப் தண்ணீர் விட்டு வேக விடவும். தனியாத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து, தக்காளியை நன்கு மசிய விட வேண்டும். இது, சாதத்துடன் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
தேங்காய்ப் பால் - வெஜிடபிள் உருண்டை குழம்பு தேவையானவை: கெட்டியான தேங்காய்ப் பால் - ஒரு கப், நறுக்கிய அவரை, வாழைக்காய், கத்திரிக்காய், பட்டாணி சேர்ந்த கலவை - 2 கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
உருண்டைக்கு: பொடியாக நறுக்கிய வெந்தய கீரை (அ) முளைக்கீரை, கடலை மாவு, பாலக்கீரை - தலா அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
கிரேவிக்கு: தேங்காய் துருவல் - ஒரு கப், கொத்தமல்லி இலை - அரை கப், சோம்பு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் - 4, தனியாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: வெந்தயகீரை, பாலக்கீரை, கடலைமாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியற்றை லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி பொரித்துக் கொள்ளவும்.
தேங்காய்துருவல், கொத்தமல்லி, சோம்பு, பச்சைமிளகாய் ஆகியற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்து இதனுடன் தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, பொரித்து வைத்திருக்கும் உருண்டைகளைப் போட்டு, தேங்காய்ப் பாலை விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். இறக்கும்போது விருப்பப்பட்டால் எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.
தேங்காய் - எள் பொடி
தேவையானவை: கடலைப்பருப்பு - அரை கப், உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், எள் - ஒரு டேபிள்ஸ்பூன், கொப்பரை துருவல் - ஒரு கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 5 (அ) 8.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, எள், பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், கொப்பரை துருவல், உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். சுவையான இந்தத் தேங்காய் - எள் பொடியை சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் அருமையாக இருக்கும்.
தேங்காய் சட்னி ரைஸ்
தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், பச்சைமிளகாய் - 3, பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், புளி - கொட்டைப்பாக்கு அளவு, பூண்டு - 3 பல், காய்ந்த மிளகாய் - 2, சாதம் - 2 கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - அரை கப், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மிக்ஸியில் புளி, மிளகாய், தேங்காய் துருவல், பூண்டு, கொத்தமல்லி எல்லாவற்றையும் விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை வறுத்துக் கொள்ளவும். இத்துடன் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்து வைத்துள்ள விழுதையும் போட்டு, 5 நிமிடம் கிளறவும். இந்தக் கலவையில் சாதத்தை போட்டுக் கலக்கி, கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
Thursday 30 April 2009
என் மம்மி கைப்பக்குவத்தில்:
மோர் கூட்டு:
காய் வகைகள்:
வாழைத்தண்டு / வாழைக்காய், முட்டைகோஸ், சேனைக்கிழங்கு, சௌ சௌ
1/ காய்களில் எதாவது ஒன்று எடுத்து, பொடியாக நறுக்கி வேக வைத்து கொள்ளவும் (உப்பு சேர்த்து)
2/ தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், கொத்த மல்லி, சீரகம், எல்லாவற்றையும் போட்டு அரைத்து, வேக வைத்துள்ள காய்களில் போட்டு கொதிக்கவிடவும்
3/ இரண்டு அல்லது மூன்று கரண்டி தயிர் விட்டு நன்றாக கலக்கவும்
4/ இறக்கி வைத்து - தேங்காய் எண்ணையில், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலைதாளித்து சேர்க்கவும்
பாகற்காய் அல்லது சுண்டைக்காய் பொரித்த குழம்பு:
முதல் வகை:1/ புளியை ஊற வைத்து, கரைத்து கொள்ளவும்
2/ இலுப்பச் சட்டியில் எண்ணை (நல்ல எண்ணை இருந்தால்) விட்டு, உளுந்து, கரிவேப்பிலை, பாகற்காய்/சுண்டைக்காய் போட்டு வதக்கி, குழம்பு பொடி பொட்டு நன்றாக வதக்கவும்.
3/ பிறகு உப்பு போட்டு, கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை விட்டு, பெருங்காயம் போட்டு நன்றாக கொதிக்க விடவும்
4/ கடைசியில் அரிசி மாவு கரைத்து (நீர்க்க இருந்தால் மட்டும்) இறக்கவும்.
(பாகற்காய் கசக்காமல் இருக்க துண்டமாக நறுக்கி அரை மணி மோரில் ஊற வைக்கவும்)
இரண்டாம் வகை:1/ புளியை ஊர வைத்து, கரைத்து கொள்ளவும்
2/ உளுந்து, சிகப்பு மிளகாய், மிளகு எண்ணை விட்டு வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து கொள்ளவும்
3/ பாகற்காய் அல்லது சுண்டைக்காயை வதக்கி, புளி நீரில் உப்பு போட்டு 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க விடவும்
4/ அரைத்த கலவையை + பெருங்காயம் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
5/ நீர்க்க இருந்தால், மாவு கரைத்து விடலாம்.
6/ இறக்கி தாளிக்கவும் (கடுகு, கறிவேப்பிலை)
எரிசேரி 1:
1/ பயத்தம் பருப்பு 1/2 கப், துவரம் பருப்பு 1/2 கப் எடுத்து வேக வைத்து கொள்ளவும்
2/ முருங்கை காய் தனியாக (1/2 வேக்காடு) வேக வைக்கவும்
3/ சிவப்பு மிளகாய், தேங்காய் துருவல், சீரகம் அரைத்து கொள்ளவும்.
4/ வேக வைத்த பருப்பில் உப்பு போட்டு, அரைத்த விழுதையும் சேர்த்து, முருங்கைக்காயையும் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
5/ தேங்காய் எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து போடவும்.
எரிசேரி 2:
1/ சேணை கிழங்கு/கருணை கிழங்கு/வாழைக்காய் எதாவது ஒன்று எடுத்து தனியாக வேக வைத்து கொள்ளவும்.
2/ துவரம் பருப்பு வேக வைத்து, காயோடு சேர்த்து கொதிக்க விடவும்.
3/ தனியா, சிவப்பு மிளகாய், தேங்காய் துருவல், சீரகம், மிளகு அரைத்து சேர்க்கவும்.
5/ தேங்காய் எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து போடவும்.
(தேவையான புளி கரைத்தும் செய்யலாம்)
கருணை/சேனை மசியல்:1/ கருணை/சேனை வேக வைத்து கொள்ளவும்.
2/ புளி கரைத்து + இலுப்ப சட்டியில் எண்ணை விட்டு, பெருங்காயம், கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி கறிவேப்பிலை தாளித்து புளி தண்ணியுடன் கொதிக்க விடவும்.
3/ கொதித்ததும், காய்களை மசித்து மீண்டும் கொதித்தவும் இறக்கவும்.
காய் வகைகள்:
வாழைத்தண்டு / வாழைக்காய், முட்டைகோஸ், சேனைக்கிழங்கு, சௌ சௌ
1/ காய்களில் எதாவது ஒன்று எடுத்து, பொடியாக நறுக்கி வேக வைத்து கொள்ளவும் (உப்பு சேர்த்து)
2/ தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், கொத்த மல்லி, சீரகம், எல்லாவற்றையும் போட்டு அரைத்து, வேக வைத்துள்ள காய்களில் போட்டு கொதிக்கவிடவும்
3/ இரண்டு அல்லது மூன்று கரண்டி தயிர் விட்டு நன்றாக கலக்கவும்
4/ இறக்கி வைத்து - தேங்காய் எண்ணையில், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலைதாளித்து சேர்க்கவும்
பாகற்காய் அல்லது சுண்டைக்காய் பொரித்த குழம்பு:
முதல் வகை:1/ புளியை ஊற வைத்து, கரைத்து கொள்ளவும்
2/ இலுப்பச் சட்டியில் எண்ணை (நல்ல எண்ணை இருந்தால்) விட்டு, உளுந்து, கரிவேப்பிலை, பாகற்காய்/சுண்டைக்காய் போட்டு வதக்கி, குழம்பு பொடி பொட்டு நன்றாக வதக்கவும்.
3/ பிறகு உப்பு போட்டு, கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை விட்டு, பெருங்காயம் போட்டு நன்றாக கொதிக்க விடவும்
4/ கடைசியில் அரிசி மாவு கரைத்து (நீர்க்க இருந்தால் மட்டும்) இறக்கவும்.
(பாகற்காய் கசக்காமல் இருக்க துண்டமாக நறுக்கி அரை மணி மோரில் ஊற வைக்கவும்)
இரண்டாம் வகை:1/ புளியை ஊர வைத்து, கரைத்து கொள்ளவும்
2/ உளுந்து, சிகப்பு மிளகாய், மிளகு எண்ணை விட்டு வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து கொள்ளவும்
3/ பாகற்காய் அல்லது சுண்டைக்காயை வதக்கி, புளி நீரில் உப்பு போட்டு 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க விடவும்
4/ அரைத்த கலவையை + பெருங்காயம் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
5/ நீர்க்க இருந்தால், மாவு கரைத்து விடலாம்.
6/ இறக்கி தாளிக்கவும் (கடுகு, கறிவேப்பிலை)
எரிசேரி 1:
1/ பயத்தம் பருப்பு 1/2 கப், துவரம் பருப்பு 1/2 கப் எடுத்து வேக வைத்து கொள்ளவும்
2/ முருங்கை காய் தனியாக (1/2 வேக்காடு) வேக வைக்கவும்
3/ சிவப்பு மிளகாய், தேங்காய் துருவல், சீரகம் அரைத்து கொள்ளவும்.
4/ வேக வைத்த பருப்பில் உப்பு போட்டு, அரைத்த விழுதையும் சேர்த்து, முருங்கைக்காயையும் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
5/ தேங்காய் எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து போடவும்.
எரிசேரி 2:
1/ சேணை கிழங்கு/கருணை கிழங்கு/வாழைக்காய் எதாவது ஒன்று எடுத்து தனியாக வேக வைத்து கொள்ளவும்.
2/ துவரம் பருப்பு வேக வைத்து, காயோடு சேர்த்து கொதிக்க விடவும்.
3/ தனியா, சிவப்பு மிளகாய், தேங்காய் துருவல், சீரகம், மிளகு அரைத்து சேர்க்கவும்.
5/ தேங்காய் எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து போடவும்.
(தேவையான புளி கரைத்தும் செய்யலாம்)
கருணை/சேனை மசியல்:1/ கருணை/சேனை வேக வைத்து கொள்ளவும்.
2/ புளி கரைத்து + இலுப்ப சட்டியில் எண்ணை விட்டு, பெருங்காயம், கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி கறிவேப்பிலை தாளித்து புளி தண்ணியுடன் கொதிக்க விடவும்.
3/ கொதித்ததும், காய்களை மசித்து மீண்டும் கொதித்தவும் இறக்கவும்.
Subscribe to:
Posts (Atom)