மோர் கூட்டு:
காய் வகைகள்:
வாழைத்தண்டு / வாழைக்காய், முட்டைகோஸ், சேனைக்கிழங்கு, சௌ சௌ
1/ காய்களில் எதாவது ஒன்று எடுத்து, பொடியாக நறுக்கி வேக வைத்து கொள்ளவும் (உப்பு சேர்த்து)
2/ தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், கொத்த மல்லி, சீரகம், எல்லாவற்றையும் போட்டு அரைத்து, வேக வைத்துள்ள காய்களில் போட்டு கொதிக்கவிடவும்
3/ இரண்டு அல்லது மூன்று கரண்டி தயிர் விட்டு நன்றாக கலக்கவும்
4/ இறக்கி வைத்து - தேங்காய் எண்ணையில், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலைதாளித்து சேர்க்கவும்
பாகற்காய் அல்லது சுண்டைக்காய் பொரித்த குழம்பு:
முதல் வகை:1/ புளியை ஊற வைத்து, கரைத்து கொள்ளவும்
2/ இலுப்பச் சட்டியில் எண்ணை (நல்ல எண்ணை இருந்தால்) விட்டு, உளுந்து, கரிவேப்பிலை, பாகற்காய்/சுண்டைக்காய் போட்டு வதக்கி, குழம்பு பொடி பொட்டு நன்றாக வதக்கவும்.
3/ பிறகு உப்பு போட்டு, கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை விட்டு, பெருங்காயம் போட்டு நன்றாக கொதிக்க விடவும்
4/ கடைசியில் அரிசி மாவு கரைத்து (நீர்க்க இருந்தால் மட்டும்) இறக்கவும்.
(பாகற்காய் கசக்காமல் இருக்க துண்டமாக நறுக்கி அரை மணி மோரில் ஊற வைக்கவும்)
இரண்டாம் வகை:1/ புளியை ஊர வைத்து, கரைத்து கொள்ளவும்
2/ உளுந்து, சிகப்பு மிளகாய், மிளகு எண்ணை விட்டு வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து கொள்ளவும்
3/ பாகற்காய் அல்லது சுண்டைக்காயை வதக்கி, புளி நீரில் உப்பு போட்டு 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க விடவும்
4/ அரைத்த கலவையை + பெருங்காயம் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
5/ நீர்க்க இருந்தால், மாவு கரைத்து விடலாம்.
6/ இறக்கி தாளிக்கவும் (கடுகு, கறிவேப்பிலை)
எரிசேரி 1:
1/ பயத்தம் பருப்பு 1/2 கப், துவரம் பருப்பு 1/2 கப் எடுத்து வேக வைத்து கொள்ளவும்
2/ முருங்கை காய் தனியாக (1/2 வேக்காடு) வேக வைக்கவும்
3/ சிவப்பு மிளகாய், தேங்காய் துருவல், சீரகம் அரைத்து கொள்ளவும்.
4/ வேக வைத்த பருப்பில் உப்பு போட்டு, அரைத்த விழுதையும் சேர்த்து, முருங்கைக்காயையும் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
5/ தேங்காய் எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து போடவும்.
எரிசேரி 2:
1/ சேணை கிழங்கு/கருணை கிழங்கு/வாழைக்காய் எதாவது ஒன்று எடுத்து தனியாக வேக வைத்து கொள்ளவும்.
2/ துவரம் பருப்பு வேக வைத்து, காயோடு சேர்த்து கொதிக்க விடவும்.
3/ தனியா, சிவப்பு மிளகாய், தேங்காய் துருவல், சீரகம், மிளகு அரைத்து சேர்க்கவும்.
5/ தேங்காய் எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து போடவும்.
(தேவையான புளி கரைத்தும் செய்யலாம்)
கருணை/சேனை மசியல்:1/ கருணை/சேனை வேக வைத்து கொள்ளவும்.
2/ புளி கரைத்து + இலுப்ப சட்டியில் எண்ணை விட்டு, பெருங்காயம், கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி கறிவேப்பிலை தாளித்து புளி தண்ணியுடன் கொதிக்க விடவும்.
3/ கொதித்ததும், காய்களை மசித்து மீண்டும் கொதித்தவும் இறக்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
oi adhu un mummy illa, ennodaa amma!!!
Post a Comment