எனது பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு - சமைப்பது மற்றும் அதை பகிர்ந்து உண்பது:
ஆரம்பிக்கும் முன், ஒரு குட்டி கதை - செவி வழி கதையே!
கர்ணன் - ஒரு பெரிய கொடைவள்ளல்னு எல்லாருக்கும் தெரியும் இல்லயா? அவர் இறந்தபின் சொர்க்கத்துக்கு போனார் (அதான் தெரியுமே!!), போனாரா.... (ஹ்ம்ம் கொட்டி கேக்கனும்..... சரியா?) அங்க எல்லாத்தயும் சுத்தி பாத்துட்டே வந்தாராம், எல்லாரும் சந்தோசமா இருக்குறத பாத்தாரு... கொஞ்ச நேரத்துல அவருக்கு பசிச்சதாம், கர்ணனுக்கு ஒரே ஆச்சர்யம் (இதுல என்னய்யா ஆச்சர்யம்னு கேக்குறீங்களா?... சொர்க்கத்துல பசிக்காதாம், அதான் ஆச்சர்யம்).
அப்போ அந்த பக்கமா வந்த நாரதர் கிட்ட கேட்டாரு நம்ம கர்ணன் (சிவாஜி இல்லீங்க.. நிஜ கர்ணர்ர், சரியா), அதுக்கு நாரதர் சொன்னாராம்... நீ எல்லா தர்மமும் செய்தாய்... ஆனால் அன்ன தானம் செய்யவில்லை.. அது தான் உனக்கு இந்த பசி னு சொன்னாராம்... அதுக்கு என்ன செய்ய னு கர்ணன் கேட்க.. ஒரு பருக்கை சாதத்தை அவரது ஆட்காட்டி விரலால் சாப்பிட சொன்னாராம் நாரதர்... கர்ணனும் அப்படியே செய்ய... என்ன ஆச்சர்யம்... பசி மறைந்தது...
இப்போ நம்ப கர்ணனுக்கு அடுத்த சந்தேகம்... அதுக்கும் நாரதரே பதில் சொன்னாராம்... கர்ணன் ஒரு முறை ஒரு வழிபோக்கனுக்கு தனது ஆட்காட்டி விரலால் உணவு பறிமாறும் சத்திரத்தை காட்டினார், அந்த புண்ணியமே காரணம் னு..
இதனால் சொல்ல வரும் கருத்து... ??
எண் ஜான் உடம்பிற்க்கு வயிறே ப்ரதானம் - அதை நிரப்ப... அப்பபோ சிறு சிறு குறிப்புகள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
ஓம் நமோ நாராயணாய!!
அடியேன்
ஸ்ரீ.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment