Thursday, 10 July 2008

பொடி வகைகள்:

இப்போ பொடி வகைகள பாப்போம், சரியா?

குழம்பு பொடி:
மிளகாய் வற்றல் (சிவப்பு) - 1/2 KG (குண்டு மிளகாயா இருந்தா சந்தோசம் தான்)
தனியா (கொத்தமல்லி விதை) - 1/2 KG
துவரம் பருப்பு - 1/4 KG
கடலை பருப்பு - 1/4 KG
மிளகு - 100 GM (ஜாஸ்தி னு தோண்றதோ??)
வெந்தயம் - 100 GM
மஞ்சள் (விரலி) - 1/4 KG (கிழங்கு மஞ்சள் இல்லயா?, கவலை வேணாமே, மஞ்ச பொடி 100 GM)

செய்முறை:
மேலே சொன்ன எல்லாவற்றையும் நல்லா வெயில காய வைத்து மிஷின் option இருந்தா மிஷினில குடுத்து, இல்லனா, மிக்ஸி ல அரைத்து பெரிய பாத்திரத்துல போட்டு பத்திர படுத்தி கொள்ளவும்.

ரசப் பொடி:
மிளகாய் வற்றல் (சிவப்பு) - 250 GM
தனியா (கொத்தமல்லி விதை) - 500 GM
துவரம் பருப்பு - 250gm
மிளகு - 150 GM
சீரகம் - 150 GM
மஞ்ச பொடி - 100 GM

செய்முறை:
மிஷின விட மிக்ஸி தான் பெஸ்ட்... ஏன்னா நல்லா அரைக்க கூடாது... தொர தொர னு அரைச்சா போதும். அரைத்து பெரிய ziplock கவர் ல போட்டு ஃப்ரிஜ் ல வச்சுடுங்க, அந்த அரோமா அரோமா னு சொல்றாங்கலே, அது போகாது.. காபி பொடி யயும் நாம ஃப்ரிஜ்ல வைக்குறது அதுக்குதானே ல?? சே... எதோ குறிப்பு குடுக்க வந்தா திரும்ப பல்பு குடுக்குறீங்களே.

சீரகம் + மிளகு ரசப் பொடி க்கு:
துவரம் பருப்பு - 1/2 கப் னா
மிளகு - 1/4 கப்
சீரகம் - 1/4 கப்
மிளகாய் வற்றல் (சிவப்பு) - 1/4 கப்

எல்லாத்தயும் இலுப்ப சட்டி (அதாங்க கடாய்) ல போட்டு சுமார வறுத்து மிக்ஸில பொடி பண்ணிக்கோங்க. அம்புட்டுதான்.

சாம்பார் பொடி க்கு:

நான் தான் சொன்னேனே, சாம்பார் க்குனு ஒரு தனி பொடி இருந்தா சாம்பார் செய்வது சுலபம்.

துவரம் பருப்பு - 1/4 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
தனியா (கொத்தமல்லி விதை) - 1/2 கப்
மிளகு - 1/8 கப்
மிளகாய் வற்றல் (சிவப்பு) - 1/4 கப்
வெந்தயம் - 2-3 ஸ்பூன்.

எல்லாத்தயும் இலுப்ப சட்டி ல வறுத்து மிக்ஸில பொடி பண்ணி அதோட 4 ஸ்பூன் மஞ்ச பொடியும் சேர்த்து கலந்து வச்சிக்கோங்க.



ரசப்பொடி - 2 வகை:

துவரம் பருப்பு - 2 கப்
தனியா - 3 கப்
மிளகு - 3 ஸ்பூன்
சீரகம் - 4 ஸ்பூன்

இவை எல்லாவற்றையும் எண்ணை விடாமல் வருத்து "தொர தொர" வென அரைத்து மஞ்சள் பொடி - 6 ஸ்பூன், மிளகாய் பொடி - 12 ஸ்பூன் போட்டு கலந்து கொள்ளவும்.

க‌த்திரிக்காய் (அ) பிற‌ கறி செய்ய‌ பொடி தூவி:

க‌ட‌லை ப‌ருப்பு 1 க‌ப்
பெருங்காய‌ம் சிறிது
மிள‌காய் வ‌ற்ற‌ல் 10
த‌னியா 1/2 க‌ப்
மிள‌கு 10
தேங்காய் துருவ‌ல் ‍ 2 ஸ்பூன்

எல்லாவ‌ற்றையும் வெறும் வாண‌லியில் வ‌றுத்து உப்பு போட்டு அறைத்து கொள்ள‌வும்

No comments: